6 மாதம் முதல் 1 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com

செல்பேசி எண் - 91769 67377


மேலும் குழந்தையின் வளர்ச்சி உடல் மற்றும் அறிவு சார்ந்த விழயமாதலால் சுருக்கமாக இரண்டைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம். சர்க்கரையை விட வெள்ளம் கலந்து கொடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில் வெள்ளத்தில் இரும்புச் (iron) சத்து அதிகம் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைகளுக்கு  உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போதுமுதலில் அறிமுகப்படுத்திய உணவிற்கும் அடுத்து நாம் அறிமுகப்படுத்தும் உணவிற்கும் கண்டிப்பாக இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மற்றவற்றை கொடுக்க வேண்டும். சிறுது  திரும்பவும் அதே உணவை முயற்சிப்பதில் தவறு இல்லை..

அடிக்கடி வயிற்ருப்போக்கு ஏற்பட்டால்:

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்க்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் அவசர சிகிச்சியாக உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய் அல்லது அரிசியை  ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிற்றுப் போக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும். அவ்வாறு சரியாகாத பட்ச்சத்தில் மருத்துவரை அணுகுவது நலம்.

அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டால்:

குப்பைமேனி தழை, கற்பூரவள்ளி தழை, முருங்கை இல்லை, துளசி இல்லை, சிறிது இஞ்சி இதில் அனைத்துமே அல்லது எந்த தழை கிடைக்கிறதோ அந்த தழைகளை கையின் உள்ளங்கையில் எடுத்துகொண்டு, அதனுடன் சிறுது கல் உப்பு சேர்த்து பிழிந்தால் சாரு கிடைக்கும். இந்தச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து ஒரு நால்லைக்கு 3 வேலை கொடுத்துவர கண்டிப்பாக சளிதொல்லையில் இருந்து விடுபடலாம்.தேன் சூட்டைத் தணிக்கும். கண்டிப்பாக தேன் கலந்து கொடுக்கவும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு

6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று யோசிக்க வேண்டாம். நாம்  நம்மை சுற்றியுள்ள பொருள்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே நாம் நம் வேலையை தொடரலாம். எந்த ஒரு செயலையும் செய்ய ஒரு வழிகாட்டுதல் இருந்தால் அவை நமக்கு மிக எளிதாக மாறிவிடும். அதனால் இவற்றை நாங்கள் ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளோம் . இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

இது போல் இன்னும் பல விழயங்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு கற்றுக் கொடுப்பது , கற்றுக் கொடுக்கும்போது கவனத்தில் வைக்க வேண்டியவை எவை எவை என்பது பற்றியும், அறிய இந்த வலைதளத்தினை தொடர்ந்து படிக்கவும். 

தற்போது 6 மாதம் முதல் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு என்னென்ன பயிற்சிகள் கொடுப்பது என்பது பற்றி ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியுள்ளோம். மேலும் விவரம் அறிய  கீழ் உள்ள வலைதளத்தினுள் நுழைக:-

6 மாதம் முதல் 1 வயது வரை அளிக்க வேண்டிய பயிற்சிகள் 


இந்த வலைதளத்தை நீங்கள் படித்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் தெரிவித்து வருங்கால் இந்தியாவை வளமாக்குவோம்.


வாழ்க வளமுடன்.

மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்


natchatthiriangal@gmail.com

செல்பேசி எண் - 91769 67377


இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன்